அண்ணி என்னைக் கலாய்க்கும் விதமாக சிரித்தபடி வண்டியில் ஏற,
“எதுக்கு சிரிக்கிற?” என்றான் அண்ணன்.
அவள் ஏதாவது தடுமாறி உளறி வைத்து விடுவாளோ என்று அந்த ஒரு நொடியில் நான் பயத்தில் ஆடிப்போனேன். ஆனால் அவளோ, “நா எதுக்கு சிரிக்கிறேன்னு உங்க தம்பிக்கிட்டயே கேளுங்க” என்று கூறி என்னை மாட்டிவிட்டு அவள் தப்பித்துக் கொண்டாள்.
அண்ணியன் – பாகம் 13
நானும் சுதாகரித்துக் கொண்டு,
“அண்ணிகிட்ட நா வண்டி ஓட்டப் போறேன்னு சொல்லிட்டு இருந்தேன். அதனால தான் நீ அப்புடி சொன்னதும் நக்கலா சிரிக்கிறாங்க” என்று கூறி சமாளித்தேன்.
“எது? இந்தக் கால வச்சிக்கிட்டா வண்டி ஓட்டப் போற? ஹாஹா”
“எதுக்கு எல்லாரும் என்ன ஒரு நோயாளி மாதிரியே ட்ரீட் பண்றீங்க?”
“கால் சரியாகுற வரைக்கும் நீ நோயாளி தான். கால பத்திரமா வச்சிக்கோ. மறுபடியும் அடிபட விட்டுறாத..” என்றபடி அண்ணா பார்க்கிங்கில் இருந்து காரை வெளியே எடுத்து கேட் அருகில் வர, அந்த கேட் ஓரத்தில் இருந்த செக்யூரிடி ரூம் அருகில் என்னுடன் பஸ்ஸில் வந்த அந்த மஞ்சள் சுடிதார் பெண் இப்பொழுது நீல நிற சுடிதாருடன் நின்று கொண்டிருந்தாள். அவளது கையில் ஒரு பேக்கும் தோளில் ஹேண்ட் பேக்கும் தொங்கிக் கொண்டிருந்தன. அவள் ஊருக்குச் செல்லத்தான் தயாராக நிற்கின்றாள் என்று தோன்றியது. நான் அவளைத் தாண்டும் வரை முகத்தினை மறைத்துக் கொண்டேன். ஆனால், அவளைத் தாண்டி சற்று முன்னால் சென்றதும் அண்ணா காரை நிறுத்திவிட்டு,
“அந்தப் பொண்ணு யாருன்னு தெரியுதா?” என்று அண்ணியைப் பார்த்துக் கேட்டான்.
“இல்லையே.. யாரு?”
“என் ஃப்ரெண்ட் வினோத் இருக்கான்ல. அவனோட சிஸ்டர் மாதிரி இருக்கா.” என்றான் சந்தேகத்துடன்.
“அவ எதுக்கு இந்த நேரத்துல இங்க நிக்குறா?” என்று அண்ணி கேட்க.
“தெரியலயே. இரு கேப்போம்.”
என்றபடி காரைப் பின்னால் எடுத்தான்.
ஏனென்று தெரியவில்லை. எனக்கு உள்ளே பக் பக் என்றிருந்தது. அவள் என்னை யாரென்று தெரிந்து கொண்டால் அதனால் ஏதாவது பிரச்சனைகள் வந்து விடுமோ என்று பயமாக இருந்தது. ஆனாலும், அவளும் ஒத்துழைத்ததனால் தானே இதெல்லாம் நடந்தது என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன்.
கார் அவள் அருகில் வந்ததும், சட்டரைப் பதித்து,
“என்ன அபி! இங்க நிக்குற?” என்று உரிமையுடன் விசாரித்தான் அண்ணன்.
இருட்டில் முகம் சரியாகத் தெரியாததனால் அவள் அண்ணனின் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு,
“ஆ.. கார்த்திக் அண்ணா! நீங்களா?” என்று கேட்டு முகம் மலர்ந்தாள்.
“ஹ்ம்ம். என்னாச்சி? எதுக்கு இங்க நிக்குற”
“இல்லண்ணா. சென்னை போய்ட்டு வர வழில நாங்க வந்த பஸ் ஆக்சிடென்ட் ஆய்டிச்சி. இவருக்கும் நல்லாவே அடிபட்டிருக்கு. தோள்கட்டுல பிராக்சர் வேற ஆகி இருக்கு. ஆபரேஷன் பண்ணனும்ன்னு சொல்லி அவர இங்கயே அட்மிட் பண்ணிட்டாங்க.” என்று கவலையுடன் கூறினாள்.
“சரியா போச்சிது போ.. அதே பஸ்ல தான் எங்க தம்பியும் வந்து, அவனுக்கும் கால்ல பிராக்சர் ஆகியிருக்கு.”
“அப்புடியா? இப்ப அவரு எங்க?”
“இதோ.. பின்னாடி தான் இருக்கான். சீஃப் டாக்டர்கிட்ட பேசி, அங்க ஊர்லயே ஏதாச்சும் ஒரு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றேன்னு சொல்லி அப்ருவல் வாங்கி அவனையும் அழைச்சின்னு தான் கெளம்புறேன்.”
“நானும் பேசிப் பாத்தேன்ணா. ஆனா அவரால இந்த நிலமைல ட்ராவல் பண்ணுறது ரொம்பக் கஷ்டம்ன்னு சொல்லிட்டாங்க.”
“ஓஹ். என்ன தான் பண்றது? பாவம். அவரு கூட யாரு இருக்காங்க இப்போ?”
“அவரோட தம்பி வந்திருக்காரு.”
“அப்போ நீ எங்க போறதுக்கு நிக்குற?”
“பாப்பாவ அவங்க அம்மா கூட விட்டுட்டு வந்தேன்ணா. அதனால தம்பி வந்ததும் இவரு என்ன போக சொல்லிட்டாரு. கேப் புக் பண்ணியிருக்கேன். அதுக்காகத் தான் வெயிட்டிங்.”
“ஹ்ம்ம். சரி. நாங்களும் ஊருக்குத் தான் போறோம். வா போலாம்.”
“இல்லண்ணா. பரவால்ல. நா கேப்லயே போய்க்கிறேன்.”
“இந்த இரவு நேரத்துல எப்புடி தனியா கேப்ல போவ? வா போலாம்.” என்று அண்ணா கண்டிப்புக் கலந்த குரலில் கூற, அவள் காரின் உள்ளே கூர்ந்து பார்த்தாள். அந்த இருட்டில் எனது முகம் அவளுக்குத் தெரிந்திருக்குமா இல்லையா என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், அவள் மறுத்தாள்.
“அவருக்கும் அடிபட்டிருக்கு. பாவம். நல்லா சாஞ்சி படுத்துக்கட்டும். நீங்க போங்கண்ணா. நா கேப்லயே வரேன்.”
“இல்லம்மா. அது பரவால்ல. அவன் அட்ஜஸ்ட் பண்ணிக்குவான். நீ வா. இட்ஸ் ஓகே.”
“இல்லண்ணா. பரவால்ல. கேப் வேற புக் பண்ணிட்டேன். வந்துட்டு இருப்பாங்க. பாவம்.”
“அதெல்லாம் பரவால்ல. கேன்சல் பண்ணிக்கலாம். இவ்ளோ தூரம் கேப்ல போறதுக்கு நெறைய பணம் செலவாகும். நீ வா. போலாம்.”
“அது.. வந்து..” அவள் சற்று இழுத்தாள்.
“என்னாச்சி? ஆபத்துக்குப் பாவமில்ல. வந்து உக்காரும்மா. அவன் உனக்கு தம்பி மாதிரித் தான்” என்று அண்ணா கூற, அவளும் வேறு வழி இல்லாமல் சரியென சம்மதித்தாள்.
“சரி.. ஒரு எட்டு உன் புருஷனையும் பாத்துட்டு போய்டலாம். இரு வரேன்” என்று கூறி காரை மீண்டும் பார்க் செய்து விட்டு, “நீயும் வரியா?” என்று அண்ணியிடம் கேட்க,
“அவர யாருன்னே எனக்கு தெரியாது. நீங்க போயிட்டு வாங்க. நா கார்லயே இருக்கேன்.” என்று கூறி மறுக்க.. அண்ணா அபியுடன் கிளம்பினான்.
அண்ணா போனதும் அவள் திரும்பி என்னைக் கலாய்த்தாள்.
“பாத்தீங்களா..! உங்க கால வைக்கிறதுக்கு ஒரு நல்ல மடி கெடச்சிருக்கு உங்களுக்கு.”
“ப்ப்ப்ப்ப்ப்ச்”
“என்ன ப்ப்ப்ச்?”
“பாவம். அவளே ஹஸ்பண்ட் அடிபட்ட கவலைல இருப்பா. அவகிட்ட போய்..”
“இல்லன்னா மட்டும்?”
“என்ன இல்லன்னா மட்டும்?”
“அவ நார்மலா இருந்தா மட்டும் உங்க கால அவ மடில போட சம்மதிப்பாளா என்ன? ஹாஹா..”
“இதெல்லாம் பெரிய விஷயமா? எனக்கு ஒரு 5 மினிட்ஸ் போதும். பேசியே அவள கவுத்துருவேன்.”
“ஹாஹா. நெனைப்புத்தான்”
“நா நெனச்சா என்னால முடியும்.”
“என்ன முடியும்?”
“எது வேணா பண்ண முடியும்.”
“அது எப்புடி?”
“எப்புடியோ.. முடியும்.”
“சரி. அவ வந்ததும், அவகிட்ட பேசி அவ மடில கால வைங்க பாப்பம்.”
“கால என்ன? கையயே வைப்பேன்.”
“ஹாஹா. கன்னத்துலயே ரெண்டு வைப்பா”
“எது? கிஸ்ஸா?”
“நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குமாம்.”
“நினைப்பெல்லாம் இல்ல. நா உண்மைய தான் சொல்றேன். நா சொன்னா செய்வேன்.”
“அப்புடியா? என்ன பெட்?”
“பெட்டா?”
“ஆமா..”
“சரி. ஓகே. நா ரெடி. நா என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்க. அத பண்றேன். ஆனா, அத நா பண்ணிட்டேன்னா நீங்க எனக்கு என்ன தருவீங்க?
“நீங்க என்ன கேட்டாலும் தரேன்.”
“என்ன கேட்டாலுமா?”
“ஆமா”
“அவ்ளோ தைரியமா?”
“ஆமா”
“பேச்சு மாற மாட்டீங்களே?”
“இல்லவே இல்ல.”
“ஆர் யூ ஸ்வர்?”
“ஹ்ம்ம். ஸ்வர்”
“சரி. நா என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்க.”
“அவ மடி மேல உங்க கால போட்டுக் காட்டுங்க.”
“இதெல்லாம் சப்ப மேட்டர் அண்ணி.”
“சப்ப மேட்டரா? அப்போ செஞ்சி காட்டுங்க.”
“இல்ல.. அவ என் பக்கத்துல உக்காந்துட்டு வரப்போறா.. எனக்கு கால்ல அடிபட்டிருக்குற விஷயம் அவளுக்கு நல்லாவே தெரியும். சோ.. கால இப்புடி வச்சிருந்தா வலிக்குதுன்னு அவகிட்ட சொன்னா.. எனக்கு பாவப்பட்டாச்சும் கால அவ மடில வச்சிக்க ஒத்துக்குவா.”
“ஓஹோ..!”
“அதனால பெருசா ஏதாச்சும் ஒரு டாஸ்க் குடுங்க.”
“இதையே செய்ய முடியுதான்னு பாருங்க முதல்ல”
“நா தான் சொல்றேன்ல. அது ஈஸி.”
“சரி. அப்போ அவ தோள் மேல கை போட்டுக் காட்டுங்க.”
“ஹாஹா. அதுவும் ஈஸி.”
“எப்புடி?”
“தூங்குற மாதிரி போடலாம்ல?”
“அப்போ அவள கிஸ் பண்ணி காட்டுங்க.”
“ஹ்ம்ம். அதுவும் பண்ணிரலாம்.”
“ஹாஹா. அடி விழுகாம இருந்தா சரி.”
“ஹாஹா. அத நா பாத்துக்குறேன். நீங்க கிஸ் எங்க பண்ணனும்ன்னு மட்டும் சொல்லுங்க?”
“அவ கன்னத்துல”
“ஹாஹா. கன்னத்துல என்ன? உங்களுக்காக அவ லிப்ஸ்லயே கிஸ் பண்ணிக் காட்றேன். லிப்ஸ் டு லிப்ஸ்..”
“ஹாஹா. பாக்கலாம்.”
“ஹ்ம்ம். இதெல்லாம் நீங்க எப்புடி பாப்பீங்க?”
“இதோ இருக்குல்ல. இந்த கண்ணாடில பாத்துக்குறேன்.” என்று ரியர்வியூ கண்ணாடியைக் காட்டினாள்.
“காருக்குள்ள இருட்டா இருக்கு. அதுல எப்புடி தெரியும்? பண்ணுனதுக்கு அப்புறமா நீங்க பண்ணல, நா பாக்கலன்னு எதுவும் சாட்டு சொல்லக்கூடாது. சரியா?”
“ஹ்ம்ம். பயப்படாதீங்க. நா ரொம்ப கவனமா அவதானிச்சுக்கிறேன்.”
“ஆனா.. அவள கிஸ் பண்ணிட்டேன்னா நா என்ன சொன்னாலும் நீங்க செய்யணும். சரியா?”
“ஹ்ம்ம். நா ஒண்டும் வாக்கு மாற மாட்டேன். டோன்ட் வொரி.. அதே மாதிரி, அவள கிஸ் பண்ணலன்னா நா என்ன சொன்னாலும் நீங்க செய்யணும். சரியா?”
“ஹ்ம்ம்.. அதுக்கென்ன..! செஞ்சிட்டா போச்சி”
“ஹ்ம்ம்.. பாக்கலாம்.”
“ஹ்ம்ம். அது சரி.. என் மேல இருக்குற கோவம் எல்லாம் போயிடிச்சா உங்களுக்கு?”
“இப்ப எதுக்கு அத மறுபடியும் ஞாபகப் படுத்துறீங்க?”
“இல்ல.. இங்க வந்தப்போ கோவமா இருந்தீங்க. இப்ப இவ்ளோ ஜாலியா பேசுறீங்க. அதனால தான் கேட்டேன்.”
“கோவம் இருக்கு. ஆனாலும் என்ன பண்ண? இப்புடி அடிபட்டு வந்திருக்குற உங்க மேல கோவத்த காட்ட வேணாமேன்னு நெனச்சேன்.”
“ஹாஹா.. ரொம்ப தேங்க்ஸ் அண்ணி.. ஆனாலும், எனக்கு உங்கள நெனச்சா பாவமா இருக்கு.”
“எதுக்கு?”
“எனக்கு ஆக்சிடென்ட் ஆனதனால இன்னைக்கு ஒரு நைட் உங்களுக்கு அநியாயமா போயிடிச்சுல?”
“என்ன அநியாயம்?”
“அந்த கவிதைய அண்ணாகிட்ட காட்டுனீங்களா இல்லையா?”
“ஒன்ன கொல்லப் போறேன் இப்ப. மூடிட்டு இருடா” என்றாள் கோபத்துடன்.
“ஹாஹா”
“என்ன இளிப்பு?”
“நீங்க வாடா போடான்னு பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”
“டேய்.. நா உன்ன கோவமா திட்றேன்டா. அத போய் புடிச்சிருக்குன்னு சொல்ற?”
“கோவமா திட்டும் போது உரிமையும் பாசமும் கூடுதலா இருக்குறவங்கள தான் எல்லாரும் வாடா போடான்னு திட்டுவாங்க.”
“ஓஹோ..!”
“ஆமா..!”
“இனிமே உங்கள வாங்க சார் போங்க சார்ன்னே சொல்லிக்கிறேன்.”
“ஹாஹா”
“சரி.. தேவ இல்லாத பேச்செல்லாம் வேணாம். பாவம் அந்தப் பொண்ணு. அவ கூட ஏதும் சேட்ட பண்ணாம ஒழுங்கா அடக்க ஒடுக்காம இருங்க. சரியா?”
“அப்போ நம்ம பெட் என்னாச்சி?”
“அதெல்லாம் வேணாம்.”
“ஏன்?”
“அவ கூட நீங்க ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணப்போயி.. அப்புறம் ஏதும் ப்ராப்ளம் ஆயிடப் போகுது. அப்புறம் நா தான் பண்ண சொன்னேன்னு வேற சொல்லுவீங்க.”
“ஹாஹா. அதெல்லாம் எதுவும் நா சொல்லமாட்டேன். பயப்படாதீங்க”
“இருந்தாலும் வேணாம்.”
“என்ன? பயமா?”
“நா எதுக்கு பயப்படணும்?”
“நா பண்ணிட்டேன்னா அப்புறம் நா சொல்றதெல்லாம் செய்ய வேண்டி வந்துடும்ன்னு நெனச்சி பயப்படுறீங்களா?”
“அதெல்லாம் இல்ல. எதுக்கு வீணா உங்களுக்கு செருப்படி வாங்கித் தரணும்ன்னு தான் யோசிக்கிறேன்.”
“ஹாஹா.. அதெல்லாம் பத்தி நீங்க கவலப்படாதீங்க. நா பாத்துக்குறேன்.”
“எனக்கு பயமா இருக்கு. வேணாம். ப்ளீஸ்..”
“சேலன்ஞ்ன்னு ஒண்ணு பண்ணிட்டா அத பண்ணலைன்னா எனக்கு தூக்கமே வராது.”
“ஐயோ..! ப்ளீஸ் கிருஷ்ணா.. சொன்னா கேளுங்க.”
“நோ..”
“சரி.. கால மட்டும் அவ மடியில வச்சி காட்டுங்க. அது போதும். வேற எதுவும் வேணாம். சரியா?”
“ஹாஹா.. சரி..”
அவளுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதும் தெரியவில்லை. அண்ணனும் அபியும் பக்கத்தில் வந்ததும் தெரியவில்லை. அண்ணா வந்து காரின் கதவைத் திறந்த போது தான் இருவரும் பேச்சை நிறுத்தினோம்.
தொடரும்..
mrr.anniyan@gmail.com