இதில் உள்ள சந்தோஷமே தனித்தன்மை தான்

Posted on

எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் ராஜேஷ். சொந்த ஊர் திருச்சி. என் 25 வயதில் வேலைக்காக சென்னை வந்தேன். இப்பொழுது என் வயது 40. திருமணம் ஆகி ஒரு குழந்தை உண்டு. எனது கதை காமம் சார்ந்தது அல்ல. ஒரு நல்ல நட்பின் முக்கியம் சார்ந்தது. காமம் எதிர்பார்ப்பு இருக்கும் தோழர்கள் என்னை மன்னிக்கவும். இந்த இணை தளத்தை எதிர்ச்சியாக பார்த்தேன். எனது கதையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இது எனது 24-25 வயதில் நடந்த ஒரு சம்பவம். நான் வீட்டில் இருந்து வேலைக்காக சென்னையில் ஒரு இல்லத்தில் வாடகைக்கு குடி ஏறினேன். எனது வீடு முதலாளி ஒரு முஸ்லீம். அவருக்கு 27 மற்றும் 29 வயதில் இரு பெண்கள் இருந்தனர். இருவருக்கும் திருமணம் ஆகி தங்கள் கணவர்களோடு சென்னையில் வசித்து வந்தனர்.

மூத்த பெண் ஷைலா பேகம். இளையவள் நஸ்ரியா பேகம். மூத்த பெண்ணின் கணவர் சவூதி இல் வேலைக்காக செல்ல அப்பெண் தனது பெற்றோர் வீட்டில் தங்கினாள். நான் அவர்கள் மாடி வீட்டில் குடி இருக்க ஷைலா எனக்கு விரைவில் நல்ல தோழி ஆனாள்.

பொதுவாக மாடியில் துணிகள் காய வய்க்க வரும்போது என்னுடன் சிறிது நேரம் பேசி செல்வாள். நாள் அடைவில் எங்கள் நட்பு நெருக்கமானது. அது காமம் அல்ல. ஆனால் ஒரு உண்மையான காதலை தாண்டிய ஒரு நட்பு.

ஷைலா திருமணம் தனது விருப்பத்திற்கு மாறாக நடந்தது என்றும். தனது இல வயது சந்தோசம் அனைத்தும் துறந்து தனது பெற்றோருக்காக செய்து கொண்ட திருமணம் என்று கூறினாள். அதற்கு பின்னர் நாங்கள் நல்ல நண்பர்கள் ஆனோம். ஷைலா இழந்த அணைத்து சந்தோஷங்களும் நான் தந்தேன்.

அவளை சினிமா. கடற்கரை. பூங்கா. தன்னுடைய சிறு வயது தோழிகள் சந்திப்பு என அணைத்து சந்தோஷங்களும் அவளுக்கு கொடுத்தேன். அவள் என்னை விட வயதில் மூத்தவள் என்பதால் அவள் வீட்டிலும் எங்கள் நட்பை தப்பாக என்னவில்லை.

மாறாக என்னை நம்பி வெளியே செல்ல அவளை அனுமதித்தனர். நானும் அவர்கள் நம்பிக்கை போல நடந்துகொண்டேன். அவள் உடை வாங்க சென்றால் என்னை கண்டிப்பாக அழைத்து செல்வாள். தான் எடுக்கும் உடை முதலில் தனக்கு பிடிக்க வேண்டும் பின்னர் எனக்கும் பிடிக்க வேண்டும் என்று என்னை கேட்டு உடை தேர்வு செய்வாள்.

எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை அவள் வாங்க மாட்டாள். ஆரம்பத்தில் அவள் என்மீது வைத்திருந்தது காதலா அன்பா என்று குழப்பம் இருந்தது. ஆனால் அப்பொழுது தான் புரிந்தது காதலுக்கு அன்பிற்கும் பெரிதாக ஒன்றும் வித்தியாசமில்லை. எங்கள் நட்பை காதலாக பார்த்தால் காதல். அன்பாக பார்த்தால் அது அன்பு. ஆனால் இப்படி ஒரு நட்பை அன்பாக பார்ப்பது கடினம்தான்.

ஒரு முறை ஷைலா இருசக்கர வாகனத்தில் நீண்டதூரம் போக ஆசை என்னை கூட்டி செல்வாயா என்று கேட்டாள். என்னிடமோ வாகனம் இல்லை. கேட்டால் கொடுக்க ஆளும் இல்லை. ஆனால் அவள் கேட்டதை செய்து அவளை சந்தோஷ படுத்த ஆசை பட்டேன்.

முதல் முறை ஒரு பெண்ணிற்காக ஷைலாவிற்காக பொய் சொன்னேன். என் அலுவலகத்தில் சொந்த ஊர் செல்லவேண்டும் அவசரம் என்று சொல்லி ஒரு இருசக்கர வாகனம் வாங்கி ஷைலாவை ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று விழுப்புறம் வரை சென்று அங்கு மதிய உணவு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு மாலை சென்னை திரும்பினோம்.

ஷைலா மிக்க சந்தோஷம் அடைந்தாள். எனக்கு நன்றியும் தெரிவித்தாள். இது ஒரு பைத்தியக்கார தனம். ஆனால். ஒருவரை மகிழ்விக்க இம்மாதிரி செயல்கள் செய்து தான் ஆக வேண்டும். அதில் இருக்கும் சந்தோஷம் அனுபவித்தால் தான் தெரியும்.

நாளைடைவில் தனக்கு திருமணம் ஆனதையே அவள் மறந்துவிட்டாள். அவளுக்கு குழந்தையே இல்லை என்ற கவலையும் போனது. ஒரு சந்தர்ப்பத்தில் அவள் என் மனைவி போல உரிமையாக பழகினாள். ஆனால் எந்த சூழ்நிலையிலும் நாங்கள் தப்பாக பழகவில்லை.

அதுவும் ஒரு சந்தர்ப்பத்தில் நடக்க நேர்ந்தது. ஒரு நாள் அவள் வீட்டில் தனிமையில் இருக்க நான் அவள் வீட்டிற்கு சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி. அவள் சுய இன்பம் அனுபவித்து இருந்தாள். அரை நிர்வாணமாக அவளை பார்த்தேன்.

அவளும் என்னை பார்த்துவிட்டாள். அவள் தன்னை சுதாரித்து கொண்டு என்னை பார்த்தாள். இளவயது காரணமாக நானும் சற்று தடுமாறினேன். அப்பொழுது ஒன்றும் நடக்க வில்லை. ஆனால் அவளும் நானும் சந்தித்த பொழுது இதை பற்றி பேச நேர்ந்தது.

தன்னால் காமத்தை கட்டு படுத்த முடிய வில்லை என்று கூறினாள். ஆனால் நாங்கள் அதை பற்றி அதிகமாக சிந்தித்ததில்லை. அன்று அவள் தேவைக்கு நான் உதவி இருந்தால் சரியா என்று எங்களுக்கு தெரியவில்லை.

இப்படியே தப்பா சரியா என்று யோசித்தே நாட்கள் ஓடின. அவள் காணவரும் 1 மாத விடுமுறையில் சென்னை வந்துவிட்டார். அவளை பார்க்க முடியவில்லை. அப்பொழுதுதான் அவள் இல்லாத தவிப்பு எனக்கு தெரிந்தது. சென்னையில் எங்கே தனி ஆளாய் ஆகிவிடுவேனோ.

சென்னையும் எனக்கு புதுசு. வேலையிலும் பேசி நண்பர்கள் ஆக்கிக்கொள்ள சந்தர்ப்பம் அமையவில்லை. அவள் எப்பொழுது வருவாளோ என்னை பார்க்க என்று காத்திருந்தேன். என்னை போல அவளும் என்னை பார்க்க ஆசை படுவாளோ இல்லை கணவர் வந்ததும் என்னை மறந்து விட்டாலோ என பல சிந்தனைகள் என் மனதில் ஓடின.

இரண்டு நாட்கள் கழித்து அவள் கணவர் வெளியில் சென்றிருந்த வேலையில் என்ன காண மாடியில் என் வீட்டிற்கு வந்தாள். எனது அலுவலக வேலை காலை அல்லது மாலை பகுதி நேரம் என்பதால் ஒரு வேலையில் வீட்டில் இருப்பேன்.

அவளை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை பார்த்து. ராஜு என்னை மன்னித்துவிடு. கணவர் கொஞ்சம் கூட தன்னை விடவில்லை. பேசிக்கொண்டும். சிலிமிஷம் செய்துகொண்டும் இருந்தார். எனது நீண்ட நாள் காம பசியும் இந்த இரண்டு நாட்கள் பலமுறை அனுபவித்து இப்பொழுது தான் அடங்கி போனது. என்று கூறினாள். அவள் அவ்வாறு கூறியதும் என்ன உடல் சூடேறியது.

மேலும் அவள். அந்த சுகத்தை அனுபவிக்கும் வரை உயிரே போவது போல இருந்தது. ஆனால் இப்பொழுது இதற்கா இவ்வளவு ஆசைபட்டோம் என்று இருக்கறது என்று கூறினாள். அப்படியே இரண்டு நாட்கள் கதை ஒன்று விடாமல் அனைத்தையும் கூறித்தள்ளினாள். எனக்கு தன் கணவர் கொண்டு வந்த வாசனை திரவத்தையும் பரிசாக தந்தாள்.

ஒரு மாதம் அவளை அப்பொழுதும் இப்பொழுதுமாக பார்த்தேன். அவள் கணவர் மீண்டும் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். பின்னர் வழக்கம் போல நாங்கள் பழக ஆரம்பித்தோம். ஒரு நாள் அவளிடம். எனக்கும் உன் கணவருக்கும் என்ன வித்யாசம் என்று வெளிப்படையாக கேட்டேன்.

அவள் உடனே அவர் என் உயிர். நீ என் நிழல் என்று எளிமையாக கூறிவிட்டாள். ஆனால் அதற்கு அர்த்தம் எனக்கு புரியவில்லை என்று கேட்டேன். அவள் அதற்கு. என் கணவர் எப்பொழுதும் என்னுள் உயிரோடு உயிராக கலந்து இருப்பார்.

நீ நிழலாக என் கூடவே இருப்பாய் என்றாள். அதாவது. அவள் நிழலாக நான் இருப்பேன் ஆனால் அவளை தொட முடியாது என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டாள். ஆனால் அப்படி சொன்னாலே தவிர அவள் கணவரை விட என்னிடம் அதிக அன்போடு இருந்தாள்.

தினம் தன் கணவரோடு காணொளி வாயிலாக பேசினாலும் என்னோடு வெளியே போகவேண்டி இருந்தால் தன் கணவரிடம் பொய் சொல்லிவிட்டு என்னோடு வெளியே கிளம்பிவிடுவாள். எங்கு சென்றாலும் தானே செலவு செய்யவேண்டும் என்று விரும்புவாள். என்னை எதிர் பாக்க மாட்டாள்.

என்னை விட சில வருடங்கள் மூத்தவளாக இருந்தாலும் வாடா. போடா என்று கூப்பிட மாட்டாள். வாப்பா. போப்பா என்று தான் அழைப்பாள். அதே போல என் அலுவலக பெண்கள் பற்றி பேசினால் அவளுக்கு பிடிக்காது. நான் அவளுக்கு மட்டும் தான் தோழனாக இருக்க வேண்டும் என்று சொல்லுவாள். அதில் அவள் தங்கையும் விதிவிலக்கல்ல.

ஒரு முறை அவள் தங்கை தன் குழந்தை பள்ளி விடுப்பு காரணமாக தன்தந்தை வீட்டிற்கு வந்திருந்தாள். இம்முறை துணி காய வைக்க தங்கை மாடிக்கு வந்தாள். இருவரும் புன்னகைத்து கொண்டோம். எப்படி இருக்கீங்க என்று கேட்டு முடிப்பதற்குள் ஷைலா மேலே வந்து. அவள் தங்கையை நோக்கி. நீ போடி நான் துணிகளை காய வைக்கிறேன் என்றாள்.

வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன். ராஜேஷ் இருக்கிறார்ல அவரோட பேசிட்டே காய வெச்சிடுறேன் என்றாள் தங்கை. கோபமடைந்த அக்கா இப்ப போக போறியா இல்லையா என்று முறைக்க இருவருக்கும் சண்டை ஏற்பட.

என்னால் தானே பிரச்சனை என்று அங்கிருந்து வெளியே சென்று விட்டேன். இது அதோடு முடிய வில்லை. நான் ஷைலா விடம் தனியாக சிக்கிய பொழுது என்னை வெளுத்து வாங்கி விட்டாள். நான் தன்னுடன் மட்டும் தான் பேச வேண்டுமாம். எனக்கும் அப்படி தான். அவள் என்னை விட்டு வேறு ஒருவர் கூட பேசினால் பிடிக்காது. இப்படி ஒரு தோழமையின் உச்சத்தில் சில வருடங்கள் கடந்தன.

அவள் கணவர் ஒருமுறை சென்னை வந்த பொழுது அவளையும் அடுத்தமுறை வரும்போது வெளிநாடு அழைத்து செல்வதாக கூறி இருந்தார். இதை அவள் என்னிடம் சொன்னதும் மனம் நொந்து போனேன். அதுவும் ஆண்டுக்கு ஒரு முறை வருபவர் இவளை அழைத்து செல்ல அடுத்த 3 – 4 மாதங்களில் திரும்ப வருவதாக கூறி இருந்தார்.

அந்த 3 மாதங்கள் அவளுடன் சரியாக பழக முடியவில்லை. அவளும் அந்த 3 மாதங்கள் தன் உறவினர் வீடு. நண்பர்கள் வீடு. பொருட்கள் வாங்குவது என்று இருந்தாள். சில இடங்களுக்கு நானும் அவளுடன் சென்றேன். ஆனால் அவளுடன் எப்பொழுதும் போல சகஜ மாக பேச மனம் இல்லை. அவள் என்னை விட்டு போக போகிறாள் என்பதே அதிகமாக என் மனதில் இருந்தது.

அவளும் அதை புரிந்துகொண்டாள். ஆனால் செய்ய ஒன்றும் இல்லை. நடப்பதை ஏற்று கொண்டு தான் ஆகவேண்டும். அது அவள் வாழ்கை. எனக்கும் அதேபோல் ஒரு வாழ்க்கை உள்ளது. இது போன்ற பிரிவுகளை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

அவளும் புறப்பட தயாரானாள். புறப்படுவதற்கு முன்பு நாள் என்னை காண வீட்டிற்கு வந்தாள். என்னை கட்டி அணைத்து அழத்தொடங்கினாள். இழப்பு எனக்கும் தானே. கண்ணீர் என் கண்களை மீறி வரத்தொடங்கியது. இனி நாங்கள் சந்திக்க வாய்ப்புகள் இல்லை.

கைபேசி வெகுவாக பெரிப்ளம் ஆகும் நேரம். என்னிடம் அப்பொழுது இல்லை. அவளிடமும் இல்லை. அவள் கிளம்பும் நாள் வந்தது. முதலில் மும்பை சென்று அங்கிருந்து விமானம் மூலம் செல்லவேண்டும். என்னை சென்னை ரயில் நிலையம் அழைத்தாள். ஆனால் எனக்கு செல்ல மனம் இல்லை. அவள் கணவர் கூட இருக்கும் பொழுது நான் என்ன பேசுவது. அதுதான் கிடைசி அவளும் நானும் சந்தித்தது.

இப்பொழுது 10 வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது. வாழ்க்கையே மாரிவிட்டது. அன்று ஷைலாவும் நானும் திருமணமான தம்பதியினர் போல வாழ்ந்தோம் அனால் கலவியல் பற்றி யோசிக்கவில்லை. அது ஒரு நல்ல நட்பாக தோன்றியதே தவிர வேறு எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லை.

இன்று இங்குள்ள கதைகளை படிக்கும் பொழுது எனது அனுபவத்தில் கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டதாக நினைப்பதா அல்லது நல்ல நண்பனாக இருந்தேன் என்று பெருமை கொள்வதா என்று தெரிய வில்லை.

ஆனால் அவளுக்கு என்ன வேண்டுமோ அதை தருவது தான் ஒரு உண்மையான நண்பனுக்கு அழகு என்று நினைக்கிறன்.

எனது முதல் மற்றும் கடைசி தோழி அவள்தான். அவள் இடத்தில் இனி வரை யாரும் வரவில்லை. ஏனோ நான் கொடுத்து வய்த்தது அவ்வளவுதான் போலும். என்னை பொறுத்தவரை அரைமணிநேர காம சுகத்தை விட நமக்காக ஒருவர் அன்பு காட்டுவதும். சண்டை போடுவதும்.

விட்டுகொடுக்காமல் இருப்பதும். இதில் உள்ள சந்தோஷமே தனித்தன்மை தான். இப்படி ஒரு உறவு என் வாழ்க்கையில் கிடைத்ததற்கு நான் மிகவும் சந்தோஷம்கொள்கிறேன். ஆனால் அது தொடராததுக்கு வருத்தமும்கொள்கிறேன்.

224211cookie-checkஇதில் உள்ள சந்தோஷமே தனித்தன்மை தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *