இது சற்று வயது வந்த இரு ஆண்களுக்கு இடையிலான ஒரு காதல் கதை

Posted on

விடை பெரும் நேரமும் நெருங்க, அவர் என்னிடம் கை கொடுக்க நெருங்கினார். பதிலுக்கு நான் அவரை லேசாக கட்டி அணைத்து, “ரொம்ப நன்றி சார்” என்றேன். இதனை சற்றும் எதிர் பார்க்காத அவர், சற்றே நெகிழ்ந்தவராய், “பார்த்து போயிட்டு வாங்க” என்றார். அவர் கண்களை சற்று நோக்கினேன், அவை லேசாக கசந்து இருந்தன. ஏன் பொய் சொல்ல வேண்டும்? என் கண்களுக்கும் அதே கதி தான்.

எங்கள் இருவரின் சங்கடத்தை தவிர்க்க, சட்டென்று என் முகத்தை வேறு பக்கம் திருப்பி கொண்டேன். பிறகு விடை பெற்ற பின் நான் அங்கிருந்து உள்ளே சென்று விட்டேன். நான் போகும் வரை அவர் அங்கு நின்றது, காலேஜில் நெருக்கமான நண்பர்களை விட்டு பிரியும் அதே மன நிலை தான், அக்கணம் எனக்குத் தோன்றியது.

நாடு திரும்பியதும், உடனே அவரை அழைத்துப் பேசினேன். பிறகு வழக்கம் போல் என் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டேன். தினமும் ஒரு முறை அல்லது இரு முறையோ நாங்கள் பேசிக் கொள்வோம். ஒரு வாரத்திற்கு பிறகு துணி வந்து விட்டதாகவும் உடனே அனுப்பி வைக்கிறேன் என்றும் சொன்னார். அதற்கு நான் வேண்டாம் என்றேன். சற்று திகைத்தவராய் ஏன் என்று கேட்டார். அதற்கு நான் இன்னும் இரு வாரத்தில் அங்கு மறுபடியும் வரப் போவதாகவும் அங்கேயே நான் அதை எடுத்து கொள்வதாகவும் சொன்னேன். உடனே அவர்,

“எத்தனை நாள் இங்கே வரீங்க, எங்கே தங்க போறீங்க?” என்றார்.
“2 வாரம், அதே ஹோட்டல் தான்” என்றேன்.

“ஏன் ஹோட்டல்ல தங்க போறீங்க, என் வீட்டிலேயே இருக்கலாமே?” என்றார்.
இதை எதிர் பார்த்த நானும், உடனே சரி என்றேன்.

மிக்க மகிழ்ந்தவராய், “எப்போ வரீங்க? என்றார்.
நான் பயணிக்கும் தேதியையும் நேரத்தையும் கூறினேன். மிக்க மகிழ்ச்சியுடன், சிறிது நேரம் கழித்து விடை பெற்றோம்.

கோயம்புத்தூர் பயணம் செல்லும் வரை ஒவ்வொரு நாளும் நாங்கள் பேசி எங்கள் நட்பை வளர்த்துக் கொண்டோம். பயணம் செல்லும் நாளும் வந்தது. பல பல சிந்தனைகளுடன் விமானம் ஏறினேன். என்ன நடக்கும், எப்படி எங்கள் நட்பு விரிவடையும், அல்லது எங்களுக்குள் எதாவது மனஸ்தாபமோ இல்லை கருத்து வேறு பாடுகள் ஏற்படுமா? அவரை பற்றி என் கணிப்பு தப்பாகி விட்டால் என்ன ஆவது? இப்படி சிறு மன குழப்பத்துடன் தூங்க முயன்று தோற்று போனேன்.

அகிலனாகிய நான்…..

விமான நிலையம் வந்து அடைந்து எனது பெட்டி பைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். அதற்கு முன்னரே முரளிக்கு குறுஞ்செய்தி மூலம் நான் வந்தடைந்து விட்டேன் என்று அனுப்பி இருந்தேன். அவரும், தான் அங்கு வெளியில்தான் காத்திருப்பதாக பதில் அனுப்பி இருந்தார். அவரி நெருங்கியதும், என்னை லேசாக கட்டி அணைத்து வரவேற்றார். பிறகு அவரது கார் இருந்த இடம் நோக்கி சென்றோம். ஆனால் அவர் டிரைவர் அங்கு இல்லை. இம்முறை அவரே காரை ஒட்டி வந்ததாக சொன்னார். ட்ரைவரை தன் சொந்த வேலைக்கு பாவிக்க விரும்ப வில்லை, என்பதால் தான் மட்டும் வந்ததாக கூறினார்.

ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, அவர் வீடு வந்து சேர்ந்தோம். வரும் வழியில் இயற்கை கொஞ்சும் அழகினை ரசித்துக் கொண்டே சென்றேன். அப்படிப்பட்ட ஒரு இயற்கை அழகைப் பார்த்து நான் கொஞ்சம் ஆச்சர்யப் பட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். இவ்வளவு அழகு தென் இந்தியாவில் இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை. அவர் வீட்டை வந்து அடைந்ததும் இன்னும் ஒரு பேரதிர்ச்சி எனக்கு.

நான் எதோ ஒரு கிராமத்தில் சினிமாவில் வரும் ஒரு பண்ணையார் வீடு போல தான் அவரது இல்லமும் இருக்கும் என்று தான் எதிர்பார்த்தேன். ஆனால் நான் அங்கு கண்டதோ என் கற்பனைக்கு எட்டாத ஒரு வீடு. எப்படி விவரிப்பதென்றே தெரியவில்லை. அதற்கு முன் முரளியை பற்றி ஒரு குறிப்பு இங்கு சொல்லியே ஆக வேண்டும். இளம் வயதில் அவர் இங்கிலாந்தில் படித்து அங்கேயே சில வருடம் வேலையும் செய்து இருக்கிறார். அதற்குப் பின்னரே அவர் ஊருக்கு திரும்பி வந்து திருமண வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்.

ஆட்டோ கேட்டை திறந்து கார் உள்ளே செல்லும் போதே எனக்கு ஒரு பெரிய பிரமிப்பு. எந்த ஒரு இடத்திலும் நான் மண்ணை பார்க்கவில்லை. சுற்று முற்று எங்கிலும் மரங்களும் செடிகளும் மிக நேர்த்தியாக திட்டமிட்டு நடப்பட்டு ஒரு பூங்கா போல தோன்றியது. காரை நிறுத்தி விட்டு வெளியே இறங்கினேன். வீட்டின் வெளிப்புறமே என்னை அங்கேயே சிரிது நேரம் நிறுத்தி விட்டது. வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது கட்டப்பட்ட ஒரு அழகிய சிறு பங்களாதான் அது. அந்த கட்டிட வேலைப்பாடுகள் ஒவ்வொன்றும் ஆங்கிலேயர்களை ஞாபகப்படுத்தியது. மேலும் அவர் அந்த வீட்டை எவ்வளவு நேர்த்தியாக பராமரித்து வருகிறார் என்பது பார்த்த எவருக்கும் உடனே தெரிந்து விடும். உள்ளே சென்றதும் நான் கண்டது, அந்த வீடமைப்பின் உட்புறம். வரவேற்பறையிலிருந்து, சமயல் அறை வரை எல்லாமே சிறந்த முறையில் வடிவமைக்க பட்டிருந்ததன. அது வரை மௌனமாகவே இருந்தவர், திடீரென்று,

“என்ன சார், எதுவுமே பேச மாட்டறீங்க?” .
நானும் என் சுய நினைவுக்கு வந்தவனாய், “ஓன்னும் இல்ல, இப்படி ஒரு அதிர்ச்சியை நான் எதிர் பார்க்கவே இல்லை” .
“ஏன், இந்த மாதிரி ஒரு வீடு நீங்க பார்த்ததே இல்லையா?”.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல, நிறையவே பார்த்தாச்சு, ஆனா தமிழ் நாட்டுல, அதுவும் இப்படி ஒரு இடத்துல, அதான் கொஞ்சம் பிரமிப்பாயிடுச்ச்சு”.
“சரி வாங்க”, என்று எனது அறைக்கு அழைத்துச் சென்றார்.

அறையில் உள்ள வசதிகளை எனக்கு விவரித்தார். நானும் ஒரு புன்முறுவலுடன், “தேங்க்ஸ் சார்”, என்றேன்.
“அதெல்லாம் ஒன்னும் வேணாம், நீங்க டிரஸ் மாத்திட்டு வாங்க, நான் காபி ரெடி பண்ணிடறேன்” என்றார்.
“காபி வேண்டாம், பால், சீனி இல்லாம டீ மட்டும் போதும்” என்றேன். சரி என்று அவர் வெளியே செல்ல, நானும் என் பெட்டியை திறந்து உள்ளிருந்த ஆடைகளை எடுத்து அலமாரியில் வைத்தேன். அவருக்கு வாங்கி வந்த பரிசு பொருள் ஒன்றை எடுத்து சிறிது நேரம் நோட்டம் விட்டேன். அப்பொழுதே கொடுக்கலாமா இல்லை நல்ல தருணதிற்கு காத்திருக்கலாமா என்ற ஒரு தயக்கம். பிறகு அதை எடுத்து வைத்து விட்டு, ஒரு சிறு குளியல் போட்டு விட்டு, உடைகளை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன். அதற்குள் அவர் தேனீருடன் எனக்காகக் காத்திருந்தார்.

இப்படியே நேரம் செல்ல செல்ல அவருடன் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் எனக்குள் ஒரு குதூகலத்தை உண்டாக்கிக் கொண்டே இருந்தது. இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி, மிகப் பெரிய ஒரு சந்தோஷம் கூடிய விரைவில் வரப் போகிறது போல் ஒரு உணர்வு என்னை ஆட்கொண்டது. ஆனால் அவரிடம் இருந்து எந்த ஒரு வினோதமான போக்கோ இல்லை செயலோ வரவில்லை. அந்த காரணத்தினால் இதெல்லாம் என் மனப்பிரம்மை மட்டும் தானோ என்று ஒரு கேள்வியும் என்னுள்ளே இருந்து கொண்டே இருந்தது. எங்களுக்குள் ஏதாவது நடக்குமென்றால் அது எங்கு, எப்பொழுது, எப்படி, என்று தான் தெரிய வில்லை.

கதைகளில் நாம் நிறையவே படித்திருப்போம், ஆண்களோ சரி பெண்களோ சரி, பார்த்துப் பழகி சில நிமிடங்களுக்குள், செக்ஸ் வைத்துக் கொள்வது போல் சித்தரிப்பார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அது அப்படி நடப்பதில்லை, அது அவ்வளவு எளிதும் இல்லை. ஆனால் எப்போது நான் அவரை கட்டி அணைக்கும் அந்த சந்தர்ப்பம் வரும் என்று மட்டும் என் மனம் பதை பதைத்துக் கொண்டே இருந்தது. அப்படி அது நடக்கா விட்டாலும் சரி, அதை ஏற்று கொள்ளும் மனப் பக்குவத்தையும் நான் எனக்குள் ஏற்படுத்தி கொண்டேன்.

பிறகு டீ அருந்த அவருடன் நானும் சேர்ந்து கொண்டேன். நான் வாங்கி வந்த அந்த பரிசை அவருக்கு கொடுத்தேன்.

“என்ன சார் இதெல்லாம், இந்த வயசில இதெல்லாம் தேவையா?”
“இது அன்பின் அடையாளம், அன்புக்கு வயசு எல்லாம் தெரியாது, ப்ளீஸ், இந்தாங்க”.
அப்பரிசை கையில் எடுத்து, “இப்போதே பிரிக்கணுமா?”.
“உங்க இஷ்டம்”.

உண்மையில் எனக்கு என்ன வாங்க வேண்டும் என்று தெரியாமல் ஒரு தங்க சங்கிலியை வாங்கி வந்தேன். அதை பிரித்துப் பார்த்த அவர், சற்றே திகைத்தவராய், “ஏன் சார் இதெல்லாம்” என்று மறுபடியும் கேட்டார்.
“வேண்டாம்னா பரவாயில்லை, யாருக்காவது கொடுத்திடலாம்”.

“சரி சரி, நானே போட்டுக்கிறேன்” என்று, அச்சங்கிலியை அவர் கழுத்தில் போட முயற்சி செய்தார். ஆனால், அந்த கொக்கியை மாட்டுவதற்கு சற்று சிரமப்பட்டார்.

139362cookie-checkஇது சற்று வயது வந்த இரு ஆண்களுக்கு இடையிலான ஒரு காதல் கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *