நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 2

Posted on

“ஹ்ஹா.. உன்னை மெரட்டலப்பா.. உண்மையை சொல்றேன். என் பொண்டாட்டி எப்படிப் பட்டவனு எனக்கு ரொம்ப நல்லா தெரியும். அவ உன்னை தப்பா சொல்ல மாட்டா. ஆனா என்னை அசிங்கப் படுத்துறதா நெனைச்சு பண்ற காரியத்துல தன்னால உன் பேரும் சேந்து கெடும். நீயும், அவளும் வேணா உண்மையா பேசலாம். ஆனா இந்த ஊரு என்ன பேசும் தெரியுமா? நெருப்பில்லாம பொகையாதுனு பேசுவாங்க. ஊசி எடம் குடுக்காம நூலு நொலையாதும்பாங்க. எல்லாம் நடந்து முடிஞ்சு கடைசில மாட்டற மாதிரி ஆனதும் அந்த ஆளுமேல பழி போட்டுட்டானு பேசிக்குவாங்க. இப்ப சொல்லு.. இது நடக்காதுனு நெனைக்கறியா?”
“……….”
“நானாவது பரவால. கல்யாணம் ஆனவன். நான் அசிங்கப் பட்டாலும் எனக்கு ஒரு அழகான வயசு பொண்ணு கூட டச்சுன்னா அது ஒரு கெத்துதான். ஆனா உன்னை நெனைச்சு பாரு.. உன் ப்யூச்சர்தான் பாதிக்கும்”
“இப்ப என்ன சொல்ல வரீங்க,?”
”ஐ மிஸ் யூ..”
”என்ன..?”
“டேக் கேர்.. பை” சட்டென காலைக் கட் பண்ணி விட்டு மீண்டும் பியரை எடுத்து தொண்டைக்குள் சரித்தான் நிருதி.. !!

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் கால் செய்தாள் கிருத்திகா. எடுத்தான்.
“என்னப்பா?”
“என்ன சொன்னீங்க?”
“எப்ப?”
“லாஸ்ட்டா சொன்னீங்கள்ள?”
“தெரியலப்பா.. என்ன சொன்னேன்”.

”லொள்ளா உங்களுக்கு? ”
“சே… இல்லப்பா”
“பின்ன.. என்ன சொன்னேன்னு என்னை கேக்கறீங்க?”
“நான் சொன்னது உனக்கு எப்படி தெரியும்? ”
“என்கிட்டதான சொன்னீங்க?”
“அப்பறம் எதுக்கு மறுபடி என்ன சொன்னீங்னு கேக்கற? ஏன் உனக்கு தெரியாதா?”
“என்ன.. ஓவர் மப்பா?”

“இன்னும் அடிக்கவே இல்ல”
“அப்பறம் ஒரு மாதிரி பேசுறீங்க?”
“அது என் பீலிங்”
“என்ன பீலிங்?”
“விடு. உனக்கு அது புரியாது”
“பரவால சொல்லுங்க”
“ப்ச்.. விடுப்பா..”

“சரி. ஐ மிஸ் யூ னு சொன்னீங்கள்ள.. அதுக்கு என்ன அர்த்தம்? ”
“ஐ மிஸ் யூனுதான் அர்த்தம்”
“ஆஆ.. கடிக்காதிங்க.. நான் ஆல்ரெடி உங்க மேல மசக் கடுப்புல இருக்கேன்”
“ஓகே பை”
“இருங்க”
“என்ன? ”
“குடிக்காம வீட்டுக்கு போங்க”
“ஏன்?”

“நீங்க குடிக்கறது எனக்கு புடிக்கல”
“உனக்கு ஏன் புடிக்கணும்?”
“எனக்கு குடிக்கறவங்களை புடிக்காது”
“சரி.. உனக்கு புடிக்கலேன்னா நான் ஏன் குடிக்காம இருக்கணும்.? எனக்கு குடிக்கறது புடிச்சிருக்கு. குடிச்சிட்டு போனாத்தான் நிம்மதியா தூங்குவேன்”
“என்னமோ பண்ணி தொலைங்க..”
“ஓகே தேங்க்ஸ்”
” அலோ..”

“ம்ம்?”
“அதுக்கு என்ன மீனிங்?”
“எதுக்கு? ”
“ஐ மிஸ் யூ சொன்னீங்கள்ள..?”
“மிஸ் யூ னுதான் அர்த்தம்ப்பா”
“வந்தன்னா தொலைச்சிருவேன் பாத்துக்கோங்க”.

“அப்படியா.. ? வாயேன்.. !!”
“என்ன.. என்னை லவ் பண்றீங்களா?”
”அதுக்கு பேரு லவ்வா?”
“உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு பொண்டாட்டியும், ரெண்டு பசங்களும் இருக்காங்க.. ஞாபகமிருக்கா?”
“அப்படியா.. அய்யய்யோ… சொல்லவே இல்ல.”
“ச்சீ வெய்ங்க..” சட்டென காலை கட் பண்ணி விட்டாள் கிருத்திகா.. !!

அதன்பின் இரண்டு நாட்கள் கிருத்திகா நிருதியின் கண்ணிலேயே படவில்லை. அது ஒரு வகையில் அவனுக்கு ஆறுதலாகக் கூட இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து அவன் வேலை முடிந்து வீடு திரும்பியபோது கிருத்திகா அவள் வீட்டுக்கு முன் நின்றிருந்தாள். காதில் போனை வைத்து சன்னக் குரலில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். அவன் பக்கம் திரும்பி அவனை ஒரே ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் திரும்பி நின்று கொண்டாள். நைட்டிக்கள் தளும்பும் அவளின் பின் எழில் மேடு பள்ளங்களை ஏக்கத்துடன் ஒரு பார்வை பார்த்து விட்டு நெஞ்சில் நிறைந்த ஏமாற்றத்துடன் தன் வீட்டுக்குள் போனான் நிருதி.. !!

அதன் பின் மீண்டும் அந்த வார ஞாயிற்றுக் கிழமை காலை பதினொரு மணிக்கு நிருதியின் வீட்டுக்கு வந்தாள் கிருத்திகா. மெரூன் கலரில் ஒரு சுடிதார் போட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவன் நெஞ்சில் சுருக்கென ஒரு முள் குத்துவதைப் போலிருந்தது. சோபாவில் உட்கார்ந்து காமெடிச் சேனலைப் பார்த்துக் கொண்டிருந்த அவனை ஓரக் கண்ணால் ஒரு சைடு பார்வை பார்த்து இதழோரப் புன்னகை சிந்தியபடி துணி துவைப்பதில் பிஸியாக இருந்த அவன் மனைவியிடம் போய் பேசினாள். பத்து நிமிடங்கள் கழித்து அவனிடம் வந்தாள்.

“ப்ரீயா?” என்று சன்னமாக அவனைக் கேட்டாள்.
“…. ” அவன், அவள் பக்கம் திரும்பக் கூட இல்லை.
“அலோ.. அண்ணா.. உங்களைத்தான்” கொஞ்சம் அழுத்திச் சொன்னாள்.

டிவியில் இருந்து பார்வையை மாற்றி அவளைப் பார்த்தான். அவள் பார்வையில் லேசான முறைப்பு தெரிந்தது.
“என்ன?”
“இன்னிக்கு ப்ரீயானு கேட்டேன்”
“என்கிட்டயா கேக்குற?”
”பின்ன.. இங்க வேற யாரு இருக்கா?”
“என் கூடல்லாம் பேசுவியா நீ?”
“என்ன சினிமா டயலாக்கா?” டிவியைப் பார்த்து விட்டு “ஈவினிங் டைம் எங்கம்மா உங்களை எங்க வீட்டுக்கு வரச் சொன்னாங்க” என்றாள்.
“எதுக்கு? ”
“அக்காகிட்ட சொல்லியிருக்கேன். கேட்டு தெரிஞ்சிக்கோங்க.. பை..” அவள் சொல்லி முடிக்கும் முன் அவன் மனைவி தொடை தெரிய தூக்கி சொருகிய ஈர நைட்டியுடன் வந்தாள்.
“என்னங்க.. இவளை இன்னிக்கு பொண்ணு பாக்க வராங்களாம்”
“என்னது..?” திகைத்தான். “பொண்ணு பாக்க வராங்களா?”
“இதுக்கு நீங்க ஏன் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க..? இவளை லவ் பண்றீங்களா என்ன?” என்று அவன் மனைவி கிண்டல் செய்து சிரித்தாள்.

“அக்கா…” என்று சிணுங்கினாள் கிருத்திகா. “இந்த சிடு மூஞ்சியை உங்களாலயே சகிக்க முடியலேனு சொல்றீங்க. இதுல நான் லவ் வேற பண்றேனா என்ன?”
“அடி.. நீ பண்ண மாட்டேனு தெரியும்டி. ஆனா இந்த மூஞ்சிக்கு உன் மேல ஏதாவது ஒரு பீல் இருந்தா.. ?”
”அடிப் பாவிகளா.. ஒரு சின்ன ஷாக் ரியாக்சனுக்கு இவ்வளவு விவாதமா?” என்றான்.
“அப்ப ஏன் ஷாக்கானீங்க?”
“இவளுக்கு ஏதோ ஜாதக தோசம். இப்ப கல்யாணம் பண்ணா ரெண்டு தாலி யோகம்ன்றதால லேட் மேரேஜ்தான் பண்ணனும்னு இதுதான் சொல்லுச்சு அது ஞாபகம் வந்துச்சு..”
“அப்படியாடி?”

147070cookie-checkநீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *