நீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 2

Posted on

“ஆமாக்கா.. எங்கம்மா எனக்கு ஜாதகம் பாத்துட்டு வந்து அப்படித்தான் சொன்னாங்க. ஆனா.. இன்னிக்கு என்னை பொண்ணு பாக்க வரவங்க அதை நம்பல. ஜாதகமே பாக்க வேண்டியதில்ல. எங்களுக்கு பொண்ணை புடிச்சிருக்கு.. கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்லிட்டாங்க” என்று சிரித்தபடி சொன்னாள் கிருத்திகா.
“அப்ப.. ஆல்ரெடி உன்னை பாத்துட்டாங்களா?” என்று நிருதி கேட்டான்.
“எங்க சொந்தக் காரங்கதான். அம்மாவை பாக்க ஆஸ்பத்திரி வந்தாங்க.. அங்க என்னை பாத்து அவங்களுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.. அதான்.. இன்னிக்கு வீட்டுக்கு வராங்க..”
“ஓகே.. வாழ்த்துக்கள். ”
”தேங்க்ஸ்.. !!”

மாலையில் கிருத்திகாவைப் பெண் பார்க்க வந்தார்கள். நிருதிக்கு அங்கு போக விருப்பம் இல்லைதான். ஆனால் அவன் மனைவி அவனை வற்புறுத்தி அழைத்துப் போய் விட்டாள். மாப்பிள்ளை பையன் பார்க்க நன்றாகத்தான் இருந்தான். ஆனால் அவளை விட உயரம் கொஞ்சம் குள்ளமாக இருந்தான். லேசாக தொப்பை போட்டு குண்டாக இருந்தான்.

கிருத்திகா நன்றாக மேக்கப் செய்திருந்தாள். அவன் மனதில் ஏற்கனவே ஆசையைத் தூண்டி விட்டிருந்த அவளின் இளம் பருவ அங்க லாவண்யங்கள் இப்போது இன்னும் பல மடங்கு ஆசையை அவன் மனதில் பெருகச் செய்தது.

கண்களால் மாப்பிள்ளை பையனைக் காட்டி நிருதியுடம் கேட்டாள் கிருத்திகா.
‘மாப்பிள்ளை எப்படி? ‘
‘சூப்பர் ‘ என்று நெக்கல் சிரிப்புடன் தலையாட்டினான்.
‘தேங்க்ஸ்’ என்று உதடுகளைச் சுழித்தாள்.

கிருத்திகாவை எல்லோருக்கும் பிடித்திருந்தது. திருமணப் பேச்சு வார்த்தை எல்லாம் நல்ல விதமாகவே நடந்து முடிந்தது. அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ஜோசியரிடம் போய் திருமண நாள் குறித்துக் கொள்வதென முடிவானது.. !!

அன்றிரவு எட்டு மணிக்கு நிருதி வெளியே போய் சரக்கடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பியபோது கிருத்திகா அவன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து அவன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாள். மாப்பிள்ளை வந்து போனபின் அவன் மீதிருந்த அவள் கோபம் குறைந்து போயிருந்தது. அவன் பாத்ரூம் போய் முகம் கழுவி உடை மாற்றி வந்து எதிர் சோபாவில் உட்கார்ந்தான். கிருத்திகாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்த்து மெலிதாகச் சிரித்தாள்.. !!

“அப்பறம் புதுப் பொண்ணு” என்றான்.
“சொல்லுங்க ணா?”
“செட்டில்தான்”
தலையாட்டிச் சிரித்தாள். “மாப்பிள்ளை எப்படி இருக்கார்ணா?”
“ஜம்முனு இருக்கான். உனக்கேத்த ஜோடி” நெக்கலை மறைத்துச் சொன்னான்.

உடனே அவன் மனைவி குறுக்கிட்டாள்.
“நீங்க யாரை சொல்றீங்க?”
“மாப்பிள்ளை பையனடி”
“அவன் இவளுக்கு ஏத்த ஜோடியா?” அவன் மனைவி முறைத்தாள்.
“அப்புறம் இல்லையா?”
“உங்க கண்ணை தொறந்து நல்லா பாத்திங்களா அவனை? இவ ஹைட்டு என்ன.. அவன் ஹைட்டு என்ன? இவளை விட பையன் கூளை..”
“அப்படியா கிருத்தி?” கிருத்திகாவைச் சீண்டினான்.
“ஆமாண்ணா.. என்னை விட கொஞ்சம் ஹைட் கம்மிதான்” என்று சிரித்தபடி சொன்னாள்.
அவன் மனைவி “அப்பறம் இவளை விட கொஞ்சம் குண்டா இருக்கான். இப்பவே லேசான தொப்பை..” என்று அடுக்கினாள்.
“ஏய் லூஸு.. அது எப்படி இருந்தா உனக்கென்ன அவனை கட்டிட்டு வாழப் போறது கிருத்திகா. கட்டிக் போறவளுக்கு புடிச்சிருக்கு. அது போதுமானது. தேவை இல்லாத பேசி நீ அவ மனசையும் சேந்து கெடுக்காத”
“நான் கெடுக்கல. அவளேதான் இதெல்லாம் பீல் பண்ணி பேசினா?” என்றாள் அவன் மனைவி.

கிருத்திகாவைப் பார்த்தான். அவள் லேசான வெட்கத்துடன் தலையாட்டினாள்.

“ஏன்.. உனக்கு அவனை புடிக்கலியா?”
“புடிச்சிருக்குணா.. சும்மா.. ஜோடிப் பொருத்தம் பத்திலாம் பேசிகிட்டிருந்தோம்”
“அப்ப உனக்கு ஓகே தான?”
“ம்ம்.. எனக்குலாம் ஓகேதான். ஒரே பையன். நல்ல வேலை. நல்ல சம்பளம். சொந்த வீடு.. ஆளும் பாக்க மோசமில்ல. கொஞ்சம் ஹைட் மட்டும் என்னை விட கம்மி அவ்வளவுதான். அப்படி அவங்க நெனச்சா என்னை கல்யாணமே பண்ணிக்க மாட்டாங்க.. எங்க வீட்லயும் எல்லாருக்கும் ஓகேதான்”
“அப்ப லைப் செட்டில்தான்?”
”ம்ம்” தலையாட்டி “உங்கள மாதிரி குடிகார அண்ணா இல்ல” என்று சிரித்தாள்.
”ஆமா.. கல்யாணத்துக்கு முன்ன எல்லா பசங்களும் நல்லவனுகதான். கல்யாணம் ஆகட்டும். அப்பறம் பாரு..”
“எல்லாருமே உங்கள மாதிரி இருக்க மாட்டாங்க தெரிஞ்சுக்கோங்க. இந்தக்கா செரியில்ல. உங்களை போனா போகுதுனு விட்டுட்டாங்க அதனாலதான் நீங்க இப்படி குடிச்சிட்டு சேட்டை பண்றீங்க.. நானாருந்தா வாய் வாயே தட்டியே குடியை நிறுத்தியிருப்பேன்”
“நீயி?”
“ஆம்மா..”
“வாயி வாயா தட்டி?”
“தட்றதா.. சூடு கூட வெப்பேன். வாயில..” என்று கிண்டல் சிரிப்பைக் காட்டினாள்.

அவன், அவள் உதட்டில் முத்தமிட்டது நினைவில் வந்து சட்டென ஒரு நொடி அவளைச் சிலிர்க்க வைத்தது. அந்த நொடி தன்னையும் மீறி அவள் முகத்தில் வெட்கம் படர்ந்தது.. !!

147070cookie-checkநீயும் கல்யாணம் பண்ணிப்பாரு.. அப்ப தெரிஞ்சுப்ப.. Part 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *