நண்பா உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்!

Posted on

முதன்முறை திருமணம் ஆகாத பெண்களோடு அதுவும் அவர்களுக்கு உயர் அதிகாரி யாக பொறுப்பு. மகிழ்ச்சி கலந்த பதட்டம் இருந்தது. ஏனினில், என் வாழ்நாளில் திருமணம் ஆகாத பெண்களோடு நான் பேசிய தில்லை. பெண்கள்அருகில் வந்தாலே ஏனோ என் உடம்பு சூடேற ஆரம்பித்தது. அதனால் எந்த பிரயோஜனம் இல்லை என்று உணர்த்து மனதை கட்டு படுத்தி கொண்டு, காம உணர்ச்சி ஏற்படும் பொழுது, சிறு வயதில் சக மாணவன் கற்று கொடுத்த சுய இன்பத்தை அனுபவித்து, வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

அதே நேரத்தில் தான் எனக்கு திருமணத்திற்காக என் பெற்றோர் பெண் பார்க்க தொடங்கினர். சரி இனி எனக்கு ஒரு தோழி மனைவி வடிவில் வர போகிறாள். என் சந்தோசம், சோகம் எல்லாம் பகிர்ந்து கொள்ள ஒருத்தி வரப்போகிறாள், மற்றும் என் காம தேவைகளை என் மனைவி இடமே தீர்த்துக்கொள்ளலாம் என முடிவு செய்தேன். திருமணமும் முடிந்தது.

என் மனைவி, அன்பிலும், குணத்திலும் சிறந்தவளாக திகழ்ந்தாள். ஆனால், சிறிது கூச்ச சுபாவம் கொண்டவள் ஆகையால் ஆரம்ப கட்டத்தில் என் காம தேவைகள் 40 % தான் கிடைத்தது, 60 %ம் கிடைக்கவில்லை, நானும் என் மனைவியை கட்டாய படுத்தவில்லை. இது தான் என் வாழ்க்கை என வாழ தொடங்கினேன்.

ஆண்டுகள் கடந்தன, 35 வயதை நெருங்கினேன். வேலையில் ப்ரிச்சனை, சொல்லி புலம்ப நண்பர்கள் இல்லை, மனைவி இடம் சொல்லலாம் என்றால், ஏற்கனவே எங்களுக்குள் குடும்ப ப்ரிச்சனை ஓடி கொண்டிருந்தது. மனம் நொந்து போனேன். நட்பின் தேவை அப்பொழுது தான் நான் உணர்தேன். என் வயதில் இருந்தவர்கள் தங்கள் சிறு வயது அல்லது நம்பிக்கையான நண்பர்களோடு தங்கள் ப்ரிச்சனைகளை பகிர்ந்து கொண்டதை பாத்து பொறாமையுற்றேன்.

எனக்கென ஒரே ஒரு நல்ல நம்பிக்கையான தோழனை தேடி கொள்ள விரும்பினேன். ஆனால் எனக்கோ 35 வயது, என்னை சிறந்த தோழனாக ஏற்று கொள்வார்களா என்று சந்தேகம் வேறு, எப்படி ஆரம்பிப்பது என்றும் தெரிய வில்லை. அனைவருக்கும் ஏற்கனவே சிறந்த நண்பர்கள் இருந்தனர். சோகத்தில் அழுதேன்.

ஒரு முறை Google லில் வேறு ஒன்று தேடும் பொழுது, ஒரு சாட் வெப்சைட் காட்டியது. அதில் முயற்சி செய்யலாம் என்று முயன்றேன். அதில் சில ஆண்களிடம் ஹாய் என்று அனுப்பினேன். பதில் வரவில்லை. சாட் தானே பெண்களிடம் பேசலாம் என்று ஹாய் சொன்னேன்.

ஆனால், அவர்கள் எனது வயதை தெரிந்துக்கொள்வதிலேயே குறியாய் இருந்தனர். இருப்பினும் என் வயது 35 என்று பதில் அளித்தேன், ஆனால் அதன் பின்னர் என்னை மதிக்க கூட இல்லை. இப்படி பல சாட்டிங் சைட்டுகள், பல நூற்று கணக்கானோர் ஆண்கள், பெண்கள் என என் நட்பு தேடலை 3 ஆண்டுகள் தொடர்ந்தேன். ஆண்கள் என் அழைப்பை மதிக்கவே இல்லை, பெண்கள் சில பேர் என் நட்பை ஏற்றனர், ஆனால் சில நாட்கள் அல்லது சில வாரங்களே தொடர்ந்தனர், பின்னர் என்னை விட்டு விலகினர்.

சில பெண்கள் தங்களுக்கு தேவைப்படும் பொழுது காம மாக பேசி மகிழ்விக்க வேண்டும், விருப்பம் என்றால் என்னோட சிறந்த தோழி ஆக சம்மதித்தனர். காம உணர்ச்சி என்பது எல்லோருக்கும் இருப்பது இயற்கை தானே, எனக்கு ஒரு நல்ல சிறந்த தோழி கிடைத்தால் போதும் என்ற ஏக்கத்தில் நானும் சம்மதித்தேன். ஆனால் அங்கு நடந்தது வேறு. தங்கள் காம பசி நிறைவேறியதும், என்னை விட்டு அவர்களும் விலகினர். பிறகு தான் நான் உணர்தேன், சாட் சைட்டுகள் எல்லாமே வெறும் பொழுதை போகவே தவிர உண்மையான நட்பு கிடைக்கும் இடம் இல்லை என.

வாழ்க்கை இருண்டதுபோல இருந்தது. வேலையில் ப்ரிச்சனை, குடும்பத்தில் ப்ரிச்சனை, நண்பர்கள் தேடலில் ஏமாற்றம். பிறகு செய்யும் வேலையை விட்டேன். சொந்தமாக தொழில் துடங்க விரும்பினேன். அதே போல் ஒரு சிராஸ், போன் ரிசார்ச் மற்றும் கம்ப்யூட்டர் ப்ரிண்டோஉட் கடை துவங்கினேன். ஓரளவு பண வரவு இருந்தது. பல புது மனிதர்களை சந்திக்கும் வாய்பு கிடைத்தது பெண்கள் உற்பட. ஆனால் அளவாக பேசி என் தொழில் மற்றும் என் மரியாதையை காப்பாற்றி கொண்டேன்.

105850cookie-checkநண்பா உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *