நண்பா உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்!

Posted on

தன் கணவர், சொந்த ஊர் போயிடலாம், இங்கு நான்கு பேர் நான்கு விதமா பேசுறது தனக்கு விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாராம். இது எப்பவோ எடுத்த முடிவு என்றும், என்னிடம் சொன்னால் நான் வருத்தப்படுவேன் என்று மறைத்ததாகவும் கூறினாள்.

நான், பரவாயில்லை போனில் பேசிக்கொள்ளலாம், முடிந்தால் உன் சொந்த ஊர் வந்து உன்னை பார்க்கிறேன் என்றேன். ஆனால் அதற்க்கு அவள், என் கணவர், போன் நம்பர் முதல்கொண்டு நமூரில் வாங்கிக்கொள்ளலாம், பழையதை இங்கேயே விட்டுவிடுவோம் என்று கூறிவிட்டாராம். அதனால் தான் அவள் போகும் முன்னர் ஒரு சந்தோஷமும் மிச்சம் வைக்கக்கூடாது என்று, அந்த சந்தோஷத்தையும் தந்ததாகவும் சொன்னாள்.

எனக்கு மேலும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவள் கணவர் வர நேரம் ஆகியபடியால் நான் அங்கிருந்து விடை பெற்றேன்.

மறுநாள் எப்பொழுதும் போல அவள் நம்பர் கால் செய்தேன், ஸ்விச்-ஆப் என வந்தது. ஒரு மாதம் விடாமல் போனில் முயற்சி செய்தேன், ஸ்விச்-ஆப் என்று தான் வந்தது. பின்னர் இந்த நாலு பேறு நாலு விதமா பேசறவங்க மூலம் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு போய்விட்டதாக தெரிந்து கொண்டேன்.

அவள் புது போன் எண் என்னிடம் இல்லாமல் இருக்கலாம், ஆனால், என் போன் எண் அவளிடம் உள்ளது என்ற மன ஆறுதலில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன், ஒரு வருடம் கழிந்துவிட்டது. அவளிடம் இருந்து ஒரு தொடர்பும் இல்லை.

அவள் என்னை ஏமாற்றி விட்டாளா, இல்லை அவள் சூழ்நிலை சரி இல்லையா என்று எனக்கு இன்று வரை புரிய வில்லை. ஆனால் என்னுடன் பழகிய நாட்களில் உண்மையாகத்தான் நடந்துகொண்டாள். அதில் எனக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை. அவளுடன் இருந்த காம நினைவுகளை விட, என் சோகம், சந்தோஷத்தில் எனக்கு தோழியாக ஆறுதல் சொன்ன நினைவுகளே என் மனதில் உள்ளது. மறுபடியும் ஒரு ஏமாற்றத்தை தாங்க எனக்கு சக்தி இல்லை. அதனால் அவளுக்காக இன்னும் காத்திருக்கிறேன்.

என்னை பொறுத்தவரை எல்லா விஷயத்திலும் உண்மையாகவும், வெளிப்படையாகவும் இருக்கும் ஒரே உறவு உண்மையான நட்பு மட்டும் தான். அது கிடைத்தும் நிலைக்கவில்லையே என்ற மனவருத்தத்தில் ஒரு வருடமாக ஆழ்ந்துகிடக்கிறேன்.

நண்பர்களே, எனது இந்த உண்மை கதையை கொஞ்சம் உணர்ச்சிபூர்வமாக சொல்ல முயற்சித்தேன். என் வாழ்க்கை சோகமும், ஒரு சிறந்த தோழியின் பிரிவும் கலந்த கதையை, என் மனபாரத்தை இறக்குவதில் தான் என் கவனம் இருந்தது. இதில் ஏதேனும் மொழி, சொற்கள் பிழை அல்லது வேறேதும் தவறுகள் இருப்பின் என்னை மன்னிக்கவும்.

என் மின்னஞ்சல் இதை என் கதையின் கருத்து தெரிந்துகொள்ள பகிரவில்லை, முடிந்தால் நொந்து போய் இருக்கும் என் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாய் இரண்டு வார்த்தை கூறினால், அறிமுகம் இல்லாத உங்களை, நண்பர்களாக எண்ணி உங்கள் ஆறுதலுக்கு நன்றி கூறுவேன்.

இதுவே எனது முதல் மற்றும் இறுதி கதை. ஆகையால், வாய்ப்பிற்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.

My special thanks to this website team for giving me an opportunity to share my feelings from my heart.

நன்றி!

105850cookie-checkநண்பா உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *