நண்பா உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்!

Posted on

அப்பொழுது தான் ஒரு திருமணமான பெண் என் கடைக்கு வர ஆரம்பித்தாள். சரியான வாயாடி. முதலில் அவளையும் மற்ற வாடிக்கையாளர்களை போல தான் பாத்தேன். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை கடைக்கு வருவாள். எனக்கும் அவளை ஏனோ பிடித்திருந்தது. நாட்கள் கடந்தன. கொஞ்சம் முன்னேறி நானே அவள் கணவர் மற்றும் அவள் குடும்பம் பற்றி விசாரித்தேன். அவள் பதிலுக்கு என் மனைவி குடும்பம் பற்றி விசாரித்தாள். சிறிது சிறிதாக நெருக்கம் ஆனோம். நண்பர்கள் இல்லாத எனக்கு அவள் தோழமை தேவைப்பட்டது. ஆனால் அதை பற்றி அவளிடம் கூற வில்லை.

அவளை பற்றி சிறு குறிப்பு, 28 வயது, பெயர் வேண்டாமே, 14 வயதிலேயே பெற்றோர்களை இழந்துவிட்டாள், உடன்பிறப்பு கிடையாது, 17 வயதில் திருமணம் ஆகிவிட்டது, 2 குழந்தைகள், கணவர் ஒரு பிரைவேட் கம்பெனி யில் வேலை, வெண்ணிறம், பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் உடல் அமைப்பு, என் கடைக்கு வரும் சில ஆண் வாடிக்கையாளர்கள், அவளை வர்ணிக்க நான் கேட்டு இருக்கிறேன். இதற்கு மேல் உங்களுக்கே புரிந்து இருக்கும் அவள் அழகு.

அவள் என் கடைக்கு சில நாட்கள் வரவில்லை. ஒரு நாள் திடீரென அவள் என் கடையை நோக்கி வேகமாக வந்து ஒரு துண்டு காகிதம் கொடுத்து விட்டு ஏதும் பேசாமல் சென்றுவிட்டாள். அந்த காகிதத்தில் ஒரு போன் நம்பர் இருந்தது, மேலும் நாளை காலை 10 மணிக்கு மேல் கால் பண்ணவும் என குறிப்பு இருந்தது. மறுநாள் காலை 10. 30 கால் செய்தேன். அவள் தான் பேசினாள், யாரோ தன் கணவரிடம் நாம் பேசுவதை தப்பாக கூறிவிட்டனர். இனி உங்கள் கடைக்கு நான் வரமாட்டேன்.

இனி தினம் போனில் பேசிக்கொள்ளலாம் என கூறினாள். பின்னர் நான் அவளிடம், இவ்ளோ ப்ரிச்சனையில் எதற்கு என்னுடன் பேச நினைக்கிறாய் என்று கேட்டேன். அதற்கு அவள், சிறுவயதிலே பெற்றோர் இழந்து, சிறுவயதிலே திருமணம் ஆகி, உடனேயே குழந்தைகள், குடும்ப பாரம் என வாழ்ந்துகொண்டு இருந்த எனக்கு உங்களுடன் பேசுவது ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் உங்களை நல்ல தோழனாக நினைக்கிறேன் என்று கூறினாள். நான் மகிழ்ச்சியில் ஆழ்ந்து போனேன். தேடியும் கிடைக்காத நட்பு இன்று என்னை தேடி வந்துள்ளது என அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

சில மாதங்கள் போனிலேயே பேசிக்கொண்டு சிறந்த நண்பர்களாக இருந்தோம். என் சந்தோஷத்தை தன் சந்தோஷமாக எண்ணினாள், என் கவலையை தன் கவலையாக வருத்தப்பட்டு எனக்கு ஆறுதல் கூறினாள். மொத்தத்தில் நான் எதிர் பார்த்த சிறந்த தோழியாக திகழ்ந்தாள். நானும் அவளுக்கு அன்பாய், ஆறுதலாய், அவள் எதிர் பார்த்ததை போல நடந்தது கொண்டேன்.

ஒரு முறை எங்கள் பேச்சு காமத்தை நோக்கி சென்றது. தனது காம வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும், எதிர்பார்ப்பு ஏதும் இல்லை என்றும் கூறினாள். நான் என் 60% காம தேவை கிடைக்கவில்லை என்று கூற சிறிதும் யோசிக்காமல், உனக்கு வேண்டும் என்றால் என்னிடம் எடுத்துக்கொள் என்றாள். நான் சற்றும் அந்த பதிலை அவளிடம் எதிர் பாக்கவில்லை. என்னை காமத்திற்காக நட்பு கொள்கிறேன் என்று அவள் நினைத்துவிடக்கூடாது என்று நான் வேண்டாம் என மருத்துவிட்டேன்.

அதற்கு அவள், சதீஷ் உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம், நீ என்னோட ஒரே ஒரு சிறந்த தோழன், உன் சந்தோஷத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்றாள். ஆனால், தன்னை அனுபவித்த பின்னர் தன்னை விட்டு விட கூடாது என்று சத்தியம் கேட்டாள். நாம் காமத்திற்காக ஒன்று சேர்ந்த நண்பர்கள் அல்ல என்று எங்கள் நட்பை தெளிவு படுத்தினாள். எனக்கு இப்படி ஒரு தோழி கிடைத்தது பெருமையாக இருந்தது, கடவுளுக்கு நன்றி கூறினேன். பிறகு அதிகமாக குடும்ப விஷயங்கள் மட்டுமே பேசினோம், அவ்வப்போது குறும்பாக பேசிக்கொள்வோம். சுமார் 5 மாதங்கள் நல்ல நட்பின் களிப்பில் ஆழ்ந்தேன்.

சென்ற வருடம் பொங்கல் திருநாள் அன்று வாழ்த்துக்களை SMS moolam பரிமாறி கொண்டோம். அன்று போனில் பேசவில்லை, விடுமுறை அல்லவா, எங்கள் இருவர் வீட்டிலும் அனைவரும் இருந்தனர். மறுநாள் மதியம் மாட்டு பொங்கல் அன்று அவளிடம் இருந்து ஒரு SMS வந்தது. அதில், நாளை காலை 10 மணிக்கு வீட்டிற்கு வா, வரும் முன்னர் கால் பண்ணவும், என்று குறிப்பிட்டு இருந்தது.

105850cookie-checkநண்பா உன்னோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *